Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தையல் கடையில் தீ விபத்து...மூச்சுத்திணறி 7 பேர் உயிரிழப்பு

sinoj
புதன், 3 ஏப்ரல் 2024 (19:47 IST)
தையல் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் மூச்சுத்திணறி 7 பேர் உயிரிழந்தனர்.
 
மாராட்டிய  மாநிலம், சதர்பதி சம்பாஜி நகர் கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள டானா பாஜாரில் தையல் கடை செயல்பட்டு வந்தது.
 
இன்று அதிகாலை 4 மணியளவில் திடீரென்று தீப்பிடித்து, இந்த தீ வேகமாகப் பரவியது. இவ்விபத்தில் 2 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த  7 பேர் புகையால் மூச்சுத்திணறி பலியாகினர்.
 
இவ்விபத்து பற்றித் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர், விரைந்து வந்து தீயை அணைத்தனர்.  இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு,  பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 
 
அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்விபத்து  பற்றி வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய விமானங்களுக்கான வான்வழியை மூடியது பாகிஸ்தான்.. பதிலடியா?

மோடி போட்ட உத்தரவு? பாகிஸ்தான் கடல்பகுதியில் நுழையும் விக்ராந்த் போர் கப்பல்? - அதிர்ச்சியில் பாகிஸ்தான்!

கோடை விடுமுறைக்கு பின் கல்லூரிகள் திறப்பது எப்போது? உயர்கல்வித்துறை அறிவிப்பு..!

ஓபிஎஸ்க்கும் எனக்கும் தந்தை - மகன் உறவு: திடீர் சந்திப்பு குறித்து சீமான் விளக்கம்..!

பெஹல்காம் தாக்குதல்: கேக் வெட்டி கொண்டாடினார்களா பாக். தூதரக அதிகாரிகள்?

அடுத்த கட்டுரையில்
Show comments