Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பையில் மீண்டும் கனமழை: கடல் சீற்றத்திற்கு வாய்ப்பு

Webdunia
ஞாயிறு, 4 ஆகஸ்ட் 2019 (10:26 IST)
மகாரஷ்டிராவில் மீண்டும் கனமான மழை பெய்து வருவதால், வெள்ளம் சூழ்ந்து இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் பல நாட்களாக தென்மேற்கு பருவ மழை பெய்து வருகிறது. இதனால் மும்பையில் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. முக்கியமாக மும்பையின் சயான், கோரேகோன், கல்யாண் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீரால் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

இந்நிலையில் மத்திய ரயில் பாதையில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் புறநகர் ரயில்களில் சில ரத்து செய்யப்பட்டுள்ளன. சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளித்து வருவதால் பேருந்துகள் முடங்கியுள்ளன.

மேலும், இந்த கனமழையால் கடல் சீற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் சூப்பர்லீக்கில் பணிபுரியும் இந்தியர்கள் வெளியேற்றம்: போர் பதற்றம்..!

ஜனாதிபதியுடன் அமித்ஷா, ஜெய்சங்கர் அவசர சந்திப்பு.. அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

உலகின் முதல் வாட்டர் போரை ஆரம்பிக்கின்றதா இந்தியா? நிபுணர்கள் சொன்னது உண்மையாகிறது..!

ஜியோ, ஏர்டெல் உடன் போட்டி போட முடியவில்லை.. திடீரென விலகிய அதானி..!

பயங்கரவாதிகளை முட்டாளாக்கி குடும்பத்துடன் தப்பிய அஸ்ஸாம் பேராசிரியர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments