Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரிபுராவில் கனமழையால் நிலச்சரிவு: 4 பேர் பலி

திரிபுரா
Webdunia
வெள்ளி, 18 மே 2018 (17:45 IST)
திரிபுராவில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் 4 பேர் பலியாகியுள்ளனர்.
 
வடமாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதில் திரிபுரா மாநிலத்தில் பெய்து வந்த கனமழையால் அங்குள்ள பல்வேறு தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதேவேலையில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வீடுகளில் சேறு மற்றும் மண் சரிந்து மூடியது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
 
இந்நிலையில், அம்மாநில முதல்வர் பிப்லப் குமார் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு, மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். அவர்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார். பின்னர் மழையால் பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்கும் பணிகளை விரைவில் நடத்தி முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
 
மேலும், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த குடும்பங்களுக்கு 5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்தார். இந்த ஆய்வின் போது முதல்வருடன் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய 200 கிலோ சத்து மாத்திரை வாய்க்காலில்.. அதிர்ச்சி சம்பவம்..!

iOS 26 ஐ அறிவித்தது ஆப்பிள் நிறுவனம்! ஆனால் இந்த மாடல்களில் மட்டும்தான் வொர்க் ஆகுமாம்! - புது சிறப்பம்சங்கள் என்ன?

விஜய் மல்லையாவுக்கு இன்னும் ரூ.7000 கோடி கடன் உள்ளது. இந்திய வங்கிகள் அறிவிப்பு..!

சிங்கப்பூர் கப்பல் விபத்து.. உயிருக்கு போராடியவர்களை மீட்ட இந்திய கப்பல் படை.. நன்றி தெரிவித்த தூதரகம்..!

நேற்றைய ஏற்றத்திற்கு பின் இன்று பங்குச்சந்தை நிலவரம் என்ன? சென்செக்ஸ் 83000 செல்லுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments