Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் கட்சி தலைமையில் காந்தி குடும்பம் கிடையாது! – பிரியங்கா காந்தி உறுதி!

Webdunia
புதன், 19 ஆகஸ்ட் 2020 (10:17 IST)
காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு விரைவில் தலைமை தேர்ந்தெடுக்கப்பட உள்ள நிலையில் அவர் கண்டிப்பாக காந்தி குடும்பத்தை சேர்ந்தவராக இருக்க மாட்டார் என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்த நிலையில் அதற்கு தார்மீக பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதவி விலகினார். காங்கிரஸ் பிரமுகர்கள் பலரும் வலியுறுத்தியும் பதவியில் நீடிக்க அவர் மறுத்து விட்டார். இதனால் காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலைவர் பொறுப்பில் சோனியா காந்தி இருந்து வருகிறார்.

இந்நிலையில் அகில இந்திய காங்கிரஸின் தலைவர் பதவிக்கான நபரை தேர்ந்தெடுக்கும் செயல்பாடுகள் விரைவில் தொடங்க இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் தலைவர் பதவியில் சோனியா காந்தி குடும்பத்தினர் யாரும் வர மாட்டார்கள் என ராகுல் காந்தி தெரிவித்திருந்தார். தற்போது பிரியங்கா காந்தி கூறுகையில் ராகுல் காந்தியின் கருத்தை ஆமோதித்து பேசியுள்ளார்.

காங்கிரஸில் குடும்ப ஆட்சி நடைபெறுவதாக பலர் அடிக்கடி குற்றம் சாட்டி வரும் நிலையில் அந்த பேச்சை உடைப்பதற்காக காந்தி குடும்பம் இந்த முடிவை எட்டியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசிக் கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments