Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹர்திக் பட்டேலுக்கு Y பிரிவு பாதுகாப்பு: பாஜக அச்சுருத்தல் காரணமா??

Webdunia
வெள்ளி, 24 நவம்பர் 2017 (20:08 IST)
குஜராத்தில் டிசம்பர் 9 மற்றும் 14 ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரஸ் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது.
 
கடந்த 22 ஆண்டுகளாக குஜராத்தில் பாஜக ஆட்சியில் துணையாக இருந்த பட்டேல் சமூகத்தினர் தற்போது பாஜக-வை எதிர்த்து வருகின்றனர்.
 
இதனால், காங்கிரஸுக்கு ஆதாயம் கிடைத்துள்ளது. பட்டேல் சமூகத்தினரின் கோரிக்கையை காங்கிரஸ் ஏற்று கொண்டது. அதாவது, பட்டேல் இனத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தகவலை பட்டேல் சமூகத்தின் தலைவர் ஹர்தீக் பட்டேல் தெரிவித்தார். 
 
இந்த அறிவிப்புக்கு பின்னர் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, குஜராத்தில் இட ஒதுக்கீடு வழங்க சாத்தியமில்லை என்று தெரிந்தும் காங்கிரஸ் - பட்டேல் குழு நாடகம் ஆடுவதாக தெரிவித்தார்.
 
இந்நிலையில், ஹர்திக் பட்டேலுக்கு வொய் பிரிவு பாதுகாப்பு வழங்க, மத்திய உள்துறை உத்தரவிட்டுள்ளது. தற்போது குஜராத் மாநில போலீசார் பாதுகாப்பு அளித்துவரும் நிலையில், இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
 
ஹர்திக்கின் உயிருக்கு ஆபத்து என்று மத்திய உளவுத் துறை அளித்த தகவலின் பேரில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

மீண்டும் தமிழக மீனவர்கள் கைது; இலங்கை கடற்படை அட்டூழியம்!

வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தை உயர்வு.. இன்றைய சென்செக்ஸ்,நிப்டி நிலவரம்..!

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. உச்சத்திற்கு செல்லும் என கணிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments