Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 மாநிலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கடும் பனிப்பொழிவு: இந்திய வானிலை மையம்

Webdunia
செவ்வாய், 20 டிசம்பர் 2022 (15:35 IST)
அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு டெல்லி உள்பட 6 மாநிலங்களில் கடும் பனி பொழிவு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
கடந்த சில நாட்களாக தமிழகம் உள்பட பல பகுதிகளில் பனிப்பொழிவு இருந்து வரும் நிலையில் பனித்திரை காரணமாக வாகன ஓட்டிகள் பெரும் சிரமப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
இந்த நிலையில் டெல்லி போன்ற மாநிலங்களில் சுமார் 6 டிகிரி செல்சியஸ் மட்டுமே வெப்பம் பதிவாகியுள்ளதை அடுத்து வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் டெல்லி, இமாச்சலப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ஹரியானா, சண்டிகர் மற்றும் பஞ்சாப் ஆகிய 6 மாநிலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கடும் பனிப்பொழிவு இருக்கும் என்று தெரிவித்துள்ளது
 
அதேபோல் ராஜஸ்தான், பீகார், மேற்கு வங்காளம், சிக்கிம் ஆகிய மாநிலங்களிலும் அடர்ந்த பனி மூட்டம் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’! கனடா இந்தியா அறக்கட்டளை வழங்கியது!

குடும்பத்துக்காக தமிழக மானத்தை பாஜகவிடம் அடகு வெச்சிட்டாங்க! - திமுகவை விமர்சித்த தவெக விஜய்!

நாளை தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், ஆரஞ்சு அலெர்ட்! - எந்தெந்த மாவட்டங்களில்?

தாஜ் மஹாலை RDX வைத்து வெடிக்கப்போவதாக மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பு..!

மழை எச்சரிக்கையை மீறி சுற்றுலா! மரம் விழுந்து சிறுவன் பரிதாப பலி! - ஊட்டியில் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments