Webdunia - Bharat's app for daily news and videos

Install App

30 ரூபாய் கேட்ட மனைவி… முத்தலாக் சொன்ன கணவன் !

Webdunia
செவ்வாய், 2 ஜூலை 2019 (12:08 IST)
டெல்லியில் வீட்டுக்குத் தேவையான காய்கறிகள் வாங்க பணம் கேட்ட மனைவியை கணவன் முத்தலாக் சொல்லி விலக்கியுள்ள சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

டெல்லியை அடுத்த தாத்ரி பகுதியில் சபீர் என்பவர் தனது மனைவி ஸைனப்புடன் வசித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்னர் ஸைனப் தன் கணவரிடம் காய்கறி வாங்குவதற்காக 30 ரூபாய் கேட்டுள்ளார். ஆனால் வேண்டுமென்றே அதைத் தர மறுத்த சபீர் ஸைனப்பிடம் தகராறு செய்துள்ளார். இந்நிலையில் இருவருக்கும் இடையே நடந்த வாக்குவாதத்தில் நடுரோட்டில் வைத்து மூன்று முறை தன் மனைவியைப் பார்த்து முத்தலாக் சொல்லியுள்ளார்.

இந்த அநியாயத்தை ஸைனப் தட்டிக்கேட்க சபீர் தனது  குடும்பத்தோடு சேர்ந்து ஸைனப்பை அடித்து உதைத்தது மட்டுமல்லாமல் அவர் முகத்தில் காறித் துப்பியுள்ளார். இதனையடுத்து அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் இதுபற்றிப் போலிஸில் புகார் அளித்துள்ளார். ஸைனப்பின் புகாரையடுத்து அதையடுத்துப் போலிஸார் சபீரைக் கைது செய்தனர். மேலும் தலைமறைவாகியுள்ள அவரது குடும்பத்தினரையும் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments