Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆம்லேட் விலை 60 ரூபாயா? தட்டி கேட்ட இளைஞர் அடித்து கொலை!

Webdunia
செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (08:57 IST)
ஹைதராபாத்தில் மதுபான பார் ஒன்றில் ஆம்லேட் விலை தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்தின் லாங்கர் ஹவுஸ் பகுதியை சேர்ந்த இளைஞர் விகாஸ். தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இவர் சமீபத்தில் தனது நண்பர் ஒருவருடன் அருகே உள்ள தனியார் மதுபான கடைக்கு மது அருந்த சென்றுள்ளார். தனி அறையில் மது அருந்திய அவர்கள் சைட் டிஷ்ஷாக ஆம்லேட் ஒன்று ஆர்டர் செய்துள்ளார்கள்.

இந்நிலையில் ஆம்லேட்டுக்கு ரூ.60 மதுபான பாரில் பில் போட்டதால் விகாஸ் பார் ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். தகராறு கை கலப்பாக மாற ஊழியர்கள் தாக்கியதில் விகாஸ் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரில் ஜெயித்தால் இந்திய நடிகைகள் எங்களுக்கு அடிமைகள்: பாகிஸ்தான் யூடியூபரின் சர்ச்சை பேச்சு..!

இரவை குளிர்விக்க வருகிறது செம மழை! 10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா மீது அணு ஆயுதங்களை ஏவவும் தயங்க மாட்டோம்! - பாகிஸ்தான் தூதர் மிரட்டல்!

கண்ணை மறைத்த இனவெறி! 6 வயது பாலஸ்தீன சிறுவனை 26 இடங்களில் குத்திக் கொன்ற முதியவர்! - நீதிமன்றம் அளித்த தண்டனை!

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

அடுத்த கட்டுரையில்
Show comments