Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐ.எம்.இ.ஐ எண்ணை அழித்தால் 3 ஆண்டுகள் சிறை: அதிரடி உத்தரவு

ஐ.எம்.இ.ஐ எண்ணை அழித்தால் 3 ஆண்டுகள் சிறை: அதிரடி உத்தரவு
, திங்கள், 25 செப்டம்பர் 2017 (06:31 IST)
செல்போனில் உள்ள ஐ.எம்.இ.ஐ எண்களை மாற்றினாலோ அல்லது அழித்தாலோ மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று தொலைத்தொடர்பு துறை எச்சரித்துள்ளது.



 
 
தீவிரவாதிகள், சமூக விரோதிகள் அதிகமாக ஐ.எம்.இ.ஐ எண் இல்லாத அல்லது ஐ.எம்.இ.ஐ எண்களை மாற்றிய செல்போன்களை பயன்படுத்துவதாக தகவல் வந்துள்ளதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த ஒரு ஆய்வில் ஒரே ஐ.எம்.இ.ஐ எண்ணில் சுமார் 18ஆயிரம் செல்போன்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக கிடைத்த தகவல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
 
மேலும் செல்போன் தொலைந்து போனால் ஐ.எம்.இ.ஐ எண்ணை வைத்துதான் கண்டுபிடிக்க முடியும். இந்த பிரத்யேக எண் சிம்கார்டு நிறுவனத்தின் சர்வரிலும் பதிவு செய்யப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மொபைல் ஆப் மூலம் பொதுக்கழிப்பறை: டெல்லி ஐகோர்ட் உத்தரவு