Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை கடத்தல் வழக்கு ; பல்டி அடித்த முக்கிய சாட்சி : போலீசார் திணறல்

Webdunia
புதன், 1 நவம்பர் 2017 (16:40 IST)
கேரள நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், முக்கிய சாட்சி ஒருவர் திலீப்பிற்கு ஆதரவாக பல்டி அடித்திருப்பதால் போலீசார் திணறி வருகின்றனர்.


 

 
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் திலீப் ஜாமீனில் வெளியே வந்துவிட்டார். இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும் பணியில் போலீசார் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஒரு முக்கிய சாட்சி பல்டி அடித்துள்ளார்.
 
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக போலீசார் கருதுவது பல்சர் சுனிலைத்தான். இந்நிலையில், திலீப்பின் மனைவி காவ்யா மாதவன் நடத்தும் துணிக்கடைக்கு பல்சர் சுனில் அடிக்கடி வந்ததாக, அந்த கடையில் பணிபுரியும் ஒரு ஊழியர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்திருந்தார்.  மேலும், காவ்யா மாதவனின் கார் ஓட்டுனர் ஒருவர், இந்த வாக்குமூலத்தை மாற்றிக்கொள்ளுமாறு தனக்கு 41 முறை தொடர்பு கொண்டு பேசியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
 
ஆனால், நீதிமன்றத்தில் அளித்த ரகசிய வாக்குமூலத்தில், பல்சர் சுனில் யாரென்றே எனக்கு தெரியாது. அவர் காவ்யா மாதவன் நடத்தும் கடைக்கு  வந்ததாக எனக்கு நினைவில் இல்லை. அதேபோல், தன்னை யாரும் 41 முறை தொலைப்பேசியில் அழைத்து பேசவில்லை என பல்டி அடித்துள்ளார்.
 
இது வழக்கின் போக்கையே திருப்பிவிடும் என்பதால் போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், இதனால் திலீப் மீதான போலீசாரின் பிடி தளர்ந்து கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்