Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொன்னதை சொன்னபடி பக்காவா செய்யும் ஜெகன் மோகன் ரெட்டி!

Webdunia
புதன், 19 ஜூன் 2019 (11:31 IST)
ஆந்திர மாநில முதல்வராக பதவியேற்றதும் ஜெகன் மோகன் ரெட்டி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை அடுத்தடுத்து நிறைவேற்றி வருகிறார். 
 
அந்த வகையில் தற்போது ஆந்திர மாநில் காவல்துறையில் உள்ள காவலர் முதல் இன்ஸ்பெக்டர் வரை அனைவருக்கும் வார விடுமுறை வழங்கப்பட வேண்டும் என முடிவு செய்து அதன்படி இன்று முதல் அதனை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளார். 
காவல் துறையில் உள்ளவர்களுக்கு வார விடுமுறை குறித்து ஆய்வு செய்து சிறப்பு கமிட்டி அமைக்கப்பட்டு மொத்தமாக 19 மாடல் விடுமுறை முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதில் அந்தந்த பகுதியில் உள்ள யூனிட் அதிகாரிகள் தங்களுக்கு ஏற்றவாறு ஒரு மாடலை தேர்வு செய்துக்கொள்ளலாம் என ஆந்திர டிஜிபி தெரிவித்துள்ளார். 
 
ஏற்கனவே, சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, விவசாயிகளுக்கு போலாவரம் திட்டம், ரையத் பரோசா திட்டம், வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள், போக்குவரத்து கழகத்தை அரசே நடத்தும் ஆகியவை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், காவலர்களுக்கான சலுகையும் வரவேற்பை பெற்றுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி செங்கோட்டை என்னுடையது.. வழக்கு தொடர்ந்த பெண்.. சுப்ரீம் கோர்ட் பதில்..!

TNPSC குரூப் 2ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு.. எந்த இணையதளத்தில் பார்க்கலாம்?

பாகிஸ்தானால் ஆப்கானிஸ்தானுக்கும் பாதிப்பு..! உலக நாடுகள் வச்ச ஆப்பு..!

இந்தியாவுக்கு முழு ஆதரவு.. டெல்லி வரவும் புதின் ஒப்புதல்.. பாகிஸ்தான் அதிர்ச்சி..!

இந்தியாவுக்குள் ஊடுருவிய 22 பாகிஸ்தான் பெண்கள்.. 95 குழந்தைகள் பிறப்பு. குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை 500

அடுத்த கட்டுரையில்
Show comments