Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானுக்கு பதிலடி.. இந்திய வான்வழியை மூடிய மத்திய அரசு.. போர் மூளுமா?

Siva
வியாழன், 1 மே 2025 (07:29 IST)
ஜம்மு காஷ்மீரில் உள்ள பெஹல்காம் தாக்குதலுக்கு பின்னர் இந்தியா பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியில் பறக்க தடை விதிக்கும் புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கடந்த 22ஆம் தேதி பெஹல்காம் பகுதியில் நடந்த மிக மோசமான தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் இந்துக்கள் என அடையாளம் காணப்பட்டு, அதன் பின்னர் கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதனை அடுத்து, சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து, இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தானியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்பது உட்பட பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வரும் நிலையில், ‘இந்திய வான்வழி பாதையை பாகிஸ்தான் விமானங்கள் பயன்படுத்த தடை’ என நேற்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதற்கான தகவல் விமானத்துறைக்கு அனுப்பப்பட்டதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. ஏற்கனவே இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வழி பாதையை பயன்படுத்த பாகிஸ்தான் தடை விதித்த நிலையில், அதற்கு பதிலடியாக மத்திய அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

தமிழகத்தில் சொத்து வரி மீண்டும் உயர்வா? அரசின் விளக்கம்..!

இந்தியா போர் தொடுத்தால் தக்க பதிலடி கொடுப்போம்: பாகிஸ்தான் ராணுவ தளபதிகள்..!

ஸ்கைப் சேவைக்கு விடை.. மே 5ல் நிறைவு பெறுகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments