Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வரலாற்று உச்சத்தில் கச்சா எண்ணெய் கொள்முதல்.. ரஷ்யாவிடம் இருந்து வாங்கி குவிக்கும் இந்தியா

Webdunia
திங்கள், 6 மார்ச் 2023 (09:52 IST)
ரஷ்யாவிடம் கடந்த சில மாதங்களாக அதிக அளவு இந்திய எண்ணெய் நிறுவனங்கள் கச்சா எண்ணையை வாங்கி குவித்து வரும் நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் வரலாறு காணாத அளவில் மிகப்பெரிய அளவில் கச்சா எண்ணெயை வாங்கி குவித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
உக்ரைன் போர் காரணமாக அமெரிக்கா உள்பட பல நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்ததோடு ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணையை வாங்க மாட்டோம் என்றும் முடிவெடுத்தன. 
 
இந்த நிலையில் ரஷ்யா கச்சா எண்ணையை மலிவு விலையில் வழங்கிவரும் நிலையில் இந்தியா அந்த கச்சா எண்ணையை அளவுக்கு அதிகமாக வாங்கி குவித்து வருவதாகவும் தனது தேவையின் 85% கச்சா எண்ணையை ரஷ்யாவிடம் இருந்து இந்தியா இறக்குமதி செய்வதாகும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
இந்த நிலையில் கடந்த மாதம் வரலாற்று உச்சமாக 16.2 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை இந்தியா ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்திருப்பதாகவும் இது வரலாற்று உச்சம் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஷ்மிர் பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்ய தயார்: அமெரிக்க அதிபர் அறிவிப்பு..!

அன்பின் மொழியை அறிமுகம் செய்த கடவுள்: தவெக தலைவர் விஜய் அன்னையர் தின வாழ்த்து..!

48 மணி நேரத்தில் 3வது ஆலோசனை கூட்டம்.. பாகிஸ்தான் விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

போர் சூழலில் பட்டாசுகளை வெடிக்க தடை! - மும்பை காவல்துறை அதிரடி உத்தரவு!

நம் எதிரிகள் கோழைகள்.. நாம் வென்றுவிட்டோம்: பாகிஸ்தான் பிரதமர் பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments