Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாட்டுசாணமும், கோமியமும் கொரோனாவை குணப்படுத்தாது! – இந்திய மருத்துவ சங்க தலைவர் எச்சரிக்கை!

Webdunia
செவ்வாய், 11 மே 2021 (13:27 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் அதை கோமியத்தால் குணப்படுத்த முடியும் என்பதற்கு ஆதாரமில்லை என இந்திய மருத்துவ சங்க தலைவர் எச்சரித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் படுக்கை வசதி பற்றாக்குறை உள்ளிட்டவற்றால் மக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் சிலர் மாட்டு கோமியம் மற்றும் மாட்டு சாணத்தால் கொரோனாவை குணப்படுத்த முடியும் என்று பேசி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் சிலர் வாரம் ஒருமுறை மாட்டுசாணாம் மற்றும் கோமியத்தை உடலில் பூசிக் கொண்டு யோகா செய்வதும், பின்னர் பால், வெண்ணையால் தங்களது உடலை சுத்தம் செய்து கொண்டும் இதன் மூலம் கொரோனா எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதாகவும் கூறி வருகின்றனர்.

இதுகுறித்து எச்சரித்துள்ள இந்திய மருத்துவ சங்க தலைவர் டாக்டர் ஜே.ஏ.ஜெயலால் கூறும்போது “கொரொனாவுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை மாட்டு சாணமோ, கோமியமோ வழங்கும் என்பதற்கு எந்த அறிவியல் பூர்வமான ஆதாரமும் கிடையாது. இது முற்றிலும் நம்பிக்கையை மட்டுமே அடிப்படையாக கொண்டது. இதனால் மக்களுக்கு உடல்நல கோளாறுகள் ஏற்படுவதுடன், விலங்கிடம் இருந்து பரவும் நோய்களும் மக்களுக்கு பரவும் அபாயம் உள்ளது” என்று எச்சரித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments