Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்ணாக மாறிய ஆண் கப்பல் மாலுமி ; பணியிலிருந்து நீக்கம்

Webdunia
செவ்வாய், 10 அக்டோபர் 2017 (14:08 IST)
ஆணாக இருந்து பெண்ணாக மாறிய கப்பல் மாலுமி வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.


 

 
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் மணீஷ் குமார் கிரி(25). இவர் கடந்த 7 வருடங்களாக ஐ.என்.எஸ் இக்ஸிகா கப்பற்படை தளத்தில் மாலுமியாக பணிபுரிந்து வருகிறார்.
 
அந்நிலையில், கடந்த வருடம் அவரின் நடவடிக்கைகளில் சில மாற்றங்கள் ஏற்பட்டது. பணி நேரம் போக, மற்ற நேரங்களில் அவர் பெண்கள் போல் உடையணிந்து, அலங்காரம் செய்ய தொடங்கியுள்ளார். இதைத் தொடர்ந்து அவரிடம் மேலதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதன் பின், விடுமுறைக்காக மும்பை சென்ற மணீஷ், அங்கு பெண்ணாக மாறும் அறுவை சிகிச்சையை செய்து கொண்டதாக தெரிகிறது.


 

 
இதையடுத்து, அவரை பணி நீக்கம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர். ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மணீஷ் “ நான் ஒன்றும் திருடனோ, பயங்கரவாதியோ கிடையாது. கடந்த 7வருடங்களாக நாட்டுக்காக உழைத்து வருகிறேன். என்னை பணி நீக்கம் செய்ததை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன். எனக்கு நியாயம் கிடைக்கும் என நம்புகிறேன்” என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்திவிட்டோம்: பாகிஸ்தான் பிரதமர் பெருமிதம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவு.. போர் பதட்டம் காரணமா?

அப்பாவிகளை அழித்தவர்கள் அழிந்துவிட்டார்கள்.. அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆவேசம்..!

நமது ராணுவத்தை நினைத்து பெருமைப்படுகிறேன்: பிரியங்கா காந்தியின் எக்ஸ் பதிவு..!

சி.பி.ஐ இயக்குநர் பிரவீன் சூட் ஓராண்டு பதவி நீட்டிப்பு.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments