Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொழிற்சாலை பாய்லர் வெடித்து தீ விபத்து: 10 பேர் பலி.. 48 பேர் காயம்..!

Mahendran
வெள்ளி, 24 மே 2024 (10:26 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் தொழிற்சாலை பாய்லர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
 
மகாராஷ்டிரா மாநிலத்தில் தானே மாவட்டம் டோம்பிவிலி பகுதியில் உள்ள ஆம்பர் தொழிற்சாலையில் உள்ள பாய்லர் நேற்று பயங்கரமாக வெடித்தது. இந்த தொழிற்சாலையின் பாய்லர் வெடித்த போது 4 கிலோமீட்டர் சுற்றளவுக்கு அதிர்வு உணரப்பட்டதாகவும், இதுகுறித்த புகைப்படங்கள் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
 
 தொழிற்சாலை பாய்லர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில்  சிக்கி 7 பேர் நேற்று உயிரிழந்த நிலையில், இன்று மேலும் 3 பேர் சடலமாக மீட்கப்பட்டதாகவும், இதனால் இந்த தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
 
மேலும் இந்த விபத்தில் 48 பேர் காயம் அடைந்துள்ளதாகவும், காயம் அடைந்தவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரில் ஜெயித்தால் இந்திய நடிகைகள் எங்களுக்கு அடிமைகள்: பாகிஸ்தான் யூடியூபரின் சர்ச்சை பேச்சு..!

இரவை குளிர்விக்க வருகிறது செம மழை! 10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா மீது அணு ஆயுதங்களை ஏவவும் தயங்க மாட்டோம்! - பாகிஸ்தான் தூதர் மிரட்டல்!

கண்ணை மறைத்த இனவெறி! 6 வயது பாலஸ்தீன சிறுவனை 26 இடங்களில் குத்திக் கொன்ற முதியவர்! - நீதிமன்றம் அளித்த தண்டனை!

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

அடுத்த கட்டுரையில்
Show comments