Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவில் சர்வீஸ் தேர்வில் காப்பி அடித்து சிக்கிய ஐபிஎஸ் அதிகாரி!!

Webdunia
செவ்வாய், 31 அக்டோபர் 2017 (13:14 IST)
சிவில் சர்வீஸ் தேர்வில் காப்பியடித்து சிக்கிய ஐபிஎஸ் அதிகாரி அவரது மனைவி மற்றும் ஆசிரியரை போலீஸார் கைது செய்துள்ளனர்.  


 
 
ஐபிஎஸ் அதிகாரி ஷபீர் கரீம் சிவில் சர்வீஸ் தேர்வில் புளூடூத் கருவியை மறைத்து வைத்து காப்பியடித்து சிக்கிக்கொண்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், அவரது மனைவி ஜாய்ஸ் ஜோய் மற்றும் அவரது ஆசிரியர் ராம் பாபுவும் உதவியது தெரியவந்தது. 
 
இதனையடுத்து அவர்களையும் போலீஸார் தெலுங்கானாவில் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து, செல்போன், புளூடூத், கேள்வித்தாள், லேப்டாப் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். 
 
புளூடூத், செல்போனை பயன்படுத்தி காப்பி அடிக்க பிரத்யேகமாக டிசைன் செய்யப்பட்ட பனியன், சட்டையை ஷபீர் கரீம் அணிந்ததும், அதை அவரின் மனைவி வடிவமைப்பு செய்து கொடுத்ததும் தெரியவந்துள்ளது. 
 
விரிவான விசாரணைக்கு பிறகு ஷபீர் கரீம் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது மனைவி மற்றும் ஆசிரியரும் சென்னைக்கு கொண்டுவரப்பட்டு சிறையில் அடைக்கப்படவுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. காவல்துறையினர் சோதனை..!

காஷ்மீரிகள் பயங்கரவாதிகள் அல்ல: ரத்தத்தை கொடுத்து உயிர் காப்பவர்கள்: மெஹபூபா முஃப்தி

இன்று இரவு 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் கணிப்பு

காஷ்மீர் தாக்குதல் மத்திய அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலாகவே தெரிகிறது!" திருமாவளவன்

பயங்கரவாதிகளுக்கு நாங்கள் பயிற்சி அளித்தது உண்மைதான்: பாகிஸ்தான் அமைச்சர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments