Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரான் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்… கண்காணிக்கும் இந்திய விமானப்படை!

Webdunia
திங்கள், 3 அக்டோபர் 2022 (12:42 IST)
சீனா சென்ற ஈரான் விமானம் இந்திய வான்பரப்பில் பறந்தபோது வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானில் இருந்து புறப்பட்ட மகான் ஏர் விமானம் ஒன்று சீனா நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. இந்த விமானம் இந்திய வான்பரப்பில் பறந்துக் கொண்டிருந்தபோது அதற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

உடனடியாக இந்திய விமானப்படை விமானங்கள் புறப்பட்டு மகான் ஏர் விமானத்தை கண்காணித்து பின் தொடர்ந்தன. அந்த விமானத்தை தொடர்ந்து சீனாவிற்கு பயணிக்க அனுமதிக்கும்படி சீனா கேட்டுக்கொண்ட நிலையில் இந்திய ராணுவ விமானங்கள் குறிப்பிட்ட தொலைவில் விமானத்தை கண்காணித்தபடி சென்றன.

தற்போது மகான் ஏர் விமானம் பத்திரமாக இந்திய வான் எல்லையை விட்டு சீன வான் எல்லைக்குள் சென்று விட்டதாக இந்திய விமானப்படை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited By: Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்த மாணவர்.. தாத்தா, பெரிய தாத்தா, மாமா, மாமி, அண்ணன் எல்லோருமே டாக்டர்கள்..!

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments