Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரள மழை வெள்ளத்தில் சிக்கிய நடிகர் ஜெயராம் குடும்பம்...

Webdunia
வெள்ளி, 17 ஆகஸ்ட் 2018 (13:05 IST)
கேரளாவில் மழை வெள்ளத்தில் சிக்கிய நடிகர் ஜெயராமின் குடும்பத்தை போலீசார் பத்திரமாக மீட்டுள்ளனர்.

 
கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. பல பகுதிகளில் வெள்ள நீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பலரது வீடுகளில் வெள்ளம் புகுந்ததால், அவர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். ராணுவத்தினரும், மீட்பு பணியினரும் பள்ளமான இடத்தில் வசிப்பவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த மழைக்கு இதுவரை 164 பேர் பரிதாபமாக பலியாகிவிட்டனர்.
 
இந்நிலையில், வெள்ளத்திலிருந்து தப்பிக்க நடிகர் ஜெயராம், அவரின் மனைவி பார்வதி, மகள் மாளவிகா ஆகியோர் திருச்சூர் நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தனர். அப்போது, குதிரன் என்னுமிடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஜெயராம் குடும்பத்தினர் வந்த கார் சிக்கிக் கொண்டது. இதுபற்றி வடக்கன்சேரி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

 
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், ஜெயராம் குடும்பத்தினரை பத்திரமாக மீட்டு தற்போது காவல் நிலையத்தில் தங்க வைத்துள்ளனர். இது தொடர்பான புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக முதல்வர் குறித்து இவ்வளவு கொச்சையாக பேசுவதா.? சி.வி சண்முகத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.!!

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா எப்போது? கரகோஷத்துடன் நடப்பட்ட பந்தக்கால்..!

தஞ்சாவூர், சேலத்தில் மினி டைடல் பூங்கா.! காணொலி வாயிலாக திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்.!!

39 டாஸ்மாக் கடைகளை உடனே அகற்றுங்கள்: தமிழக அரசுக்கு ரயில்வே துறை கடிதம்..!

நாளை மத்திய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்திற்கு கனமழையா?

அடுத்த கட்டுரையில்
Show comments