Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏதேச்சாதிகார பாஜகவிற்கு எதிராக ஒன்று கூடுவோம்: ஜிக்னேஷ் மேவானி!

Webdunia
வியாழன், 24 மே 2018 (15:15 IST)
தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நேற்று முன்தினம் போராட்டக்காரர்களை கலைக்க துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் 11 பேர் பலியாகிய நிலையில் நேற்றும் இரண்டாவது நாளாக துப்பாக்கி சூடு நடந்தது. இதையடுத்து கடந்த இரண்டு நாட்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. 
 
இந்நிலையில் இந்த கொடூரம் குறித்து தற்போது குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி கருத்து தெரிவித்துள்ளார். குஜராத்தின் வட்காம் தொகுதியில் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தனித்து போட்டியிட்டு ஜிக்னேஷ் மேவானி வெற்றி பெற்றார். 
 
நேற்று கர்நாடக முதல்வராக பதவியேற்ற குமாரசாமியின் விழா குறித்து டிவிட்டரில் பதிவிட்டார். அவரது பதிவு பின்வருமாறு, குமாரசுவாமி அவர்களின் பதவியேற்பு விழாவில் ஏதேச்சாதிகார பாஜகவிற்கு எதிராக ஒன்று கூடிய அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிசூட்டில் பாதிக்கபட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களது போராட்டத்தில் பங்கு கொள்ளுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கைதான யூடியூபர் ஜோதியின் சொத்து மதிப்பு இத்தனை லட்சமா? அதிர்ச்சி தகவல்..!

இந்தியா ஒன்றும் தர்மசத்திரம் கிடையாது.. இலங்கை தமிழர் மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்..!

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கன மழை.. வானிலை எச்சரிக்கை..!

இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கும் அமெரிக்காவுக்கும் சம்பந்தமில்லை: விக்ரம் மிஸ்ரா

மீண்டும் அதிகரிக்க தொடங்கிய கொரோனா தொற்று... சிங்கப்பூர், ஹாங்காங்கில் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments