Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொடச்சல் கொடுக்கும் காங்கிரஸ்; கண்கலங்கிய குமாரசாமி: அடுத்து ராஜினாமாவா?

Webdunia
வியாழன், 10 ஜனவரி 2019 (15:15 IST)
கர்நாடக முதலைமச்சர் குமாரசாமி காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் கொடுக்கும் டார்ச்சர் தாக்க முடியவில்லை என கண்ணீர் விட்டு அழுத சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
கர்நாடகத்தில் பாஜக, காங்கிரஸ், மஜத ஆகிய கட்சிகள் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டன. இந்நிலையில் எந்த கட்சியும் பெரும்பான்மை பெறாத காரணத்தால் காங்கிரஸ் - மஜக கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகிறது. 
 
என்னத்தான் கூட்டணி அமைத்தாலும், காங்கிரஸ் மற்றும் மஜக இடையே ஏதோ பிரச்சனை இருந்து கொண்டேதான் இருக்கிறது. இந்நிலையில் மஜத கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.
 
அப்போது குமாரசாமி திடீரென கண்ணீர் விட்டு அழுது, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் எனக்கு மிகுந்த மன உளைச்சலையும் டார்ச்சரையும் கொடுத்து வருகின்றனர். எனினும் இவற்றை மாநில மற்றும் கட்சியின் நலனை கருத்தில் கொண்டு நான் பொறுத்து கொண்டு போகிறேன் என தெரிவித்துள்ளார். 
 
இதற்கு முன்னர் காங்கிரசுடன் கூட்டணி அமைத்த சில மாதங்களிலேயே முதல்வர் பதவி என்பது ரோஜா பூ படுக்கை அல்ல, முள் படுக்கை என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இப்படியே போனால், இது ராஜினாமாவில் அல்லது கூட்டணி பிளவு ஆகிய எதோ ஒன்றில் போய் முடியும் என கர்நாடக மக்கள் மத்தியில் பேச்சு நிலவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments