Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கவுரி லங்கேஷ் கொலை குறித்து துப்பு கொடுத்தால் ரூ.10 லட்சம் சன்மானம்

கவுரி லங்கேஷ் கொலை குறித்து துப்பு கொடுத்தால் ரூ.10 லட்சம் சன்மானம்
, வெள்ளி, 8 செப்டம்பர் 2017 (14:22 IST)
பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை குறித்து துப்பு கொடுத்தால் ரூ.10 லட்சம் சன்மானம் வழங்குவதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.


 

 
பெங்களூரைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளரும், சமூக ஆர்வலருமான கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த படுகொலை தொடர்பாக விசாரணை நடத்த உளவுத்துறை பிரிவு ஐ.ஜி பி.கே.சிங் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
 
தற்போது கவுரி லங்கேஷ் வீட்டிற்கு சென்று சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கொலை குறித்து துப்பு கொடுத்தால் ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என கர்நாடக உள்துறை அமைச்சர் ராமலிங்கா தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

7 வயது முதல் பாலியல் தொழில்; ஜப்பானில் அவலம்: அதிரவைக்கும் காரணம்!!