Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மின் ஊழியருக்கு அடி உதை.. நடத்துனர்களுடன் வாக்குவாதம்.. வாக்குறுதிகளால் கர்நாடகத்தில் பரபரப்பு..!

Webdunia
புதன், 24 மே 2023 (16:33 IST)
கர்நாடக மாநிலத்தில் 200 யூனிட்டுகள் இலவச மின்சாரம் மற்றும் பெண்களுக்கு இலவச பேருந்து என காங்கிரஸ் வாக்குறுதி கொடுத்த நிலையில் தற்போது பொதுமக்கள் இந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற போராட்ட நடத்துவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில் மின் ஊழியர்கள் மின் கணக்கெடுப்புக்கு வந்த போது பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 200 யூனிட் வரை மின்சாரம் கட்டணம் கிடையாது என்று வாக்குவாதம் செய்த பொதுமக்கள் மின் கணக்கீடு செய்ய வந்த மின் ஊழியரை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. 
 
அதேபோல் அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்கள் பயணச்சீட்டை பணம் கொடுத்து வாங்க மறுத்து நடத்துனர் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார் 
 
காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்து சில தினங்களே ஆகி உள்ள நிலையில் தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் போராட்டம் நடத்துவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிந்து நதிநீரை நிறுத்தினால்.. அணு ஆயுதத்தை பயன்படுத்தவும் தயார்..? - பாகிஸ்தான் மிரட்டல்!

போர் மூண்டால் இந்தியா பாதுகாப்பாக இருக்கும்.. பாகிஸ்தான் படுமோசமாகிவிடும்: மூடிஸ் கணிப்பு..!

வக்பு திருத்த சட்ட வழக்கில் இருந்து விலகிய சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி.. என்ன காரணம்?

மே 7ஆம் தேதி.. நாள் குறித்த மத்திய உள்துறை அமைச்சகம்.. அனைத்து மாநிலங்களுக்கும் முக்கிய உத்தரவு..!

மோடி, ராகுல் காந்தியுடன் சுப்ரீம் கோர்ட் நீதிபதி முக்கிய ஆலோசனை.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments