Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பஞ்சாயத்து தேர்தல்னா என்னன்னு தெரியாது! – 72 வருடங்களாக தேர்தலை பார்க்காத கிராமம்!

Webdunia
வியாழன், 17 டிசம்பர் 2020 (08:15 IST)
கர்நாடகாவில் பஞ்சாயத்து தேர்தலுக்கான பணிகள் தொடங்கியுள்ள நிலையில் கடந்த 72 வருடங்களாக பஞ்சாயத்து தேர்தலையே பார்க்காத கிராமம் ஒன்று உள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் கிராம பஞ்சாயத்து தேர்தல் நடத்துவது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில், நீதிமன்றம் தேர்தலை நடத்த அனுமதி அளித்துள்ளது. இதனால் எதிர்வரும் 22 முதல் 27 வரை கிராம பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில் பெலகாவி மாவட்டத்தில் உள்ள பெல்லத பாகெவாடி என்னும் கிராமத்தில் கடந்த 72 ஆண்டுகளாக பஞ்சாயத்து தேர்தலே நடைபெறாத சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கிராமத்தில் உள்ள 9 வார்டுகளுக்கும் 33 உறுப்பினர்களையும் அந்த மக்கள் ஒருமனதாகவே தேர்ந்தெடுத்து விடுவதால் தேர்தலுக்கு அவசியமில்லாமல் போய் விடுகிறதாம். 1977ம் ஆண்டில் ஒரு வார்டுக்கு மட்டும் ஒரே ஒருமுறை மட்டும் தேர்தல் நடத்ததாகவும் அதற்கு பிறகு இதுவரை அங்கு தேர்தலே நடைபெறவில்லை என்றும் கூறப்படுகிறது.

தற்போது தேர்தல் நடத்த மாநில அரசுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் தேர்தலுக்கு முன்னரே 9 வார்டுகளுக்குமான உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டனர் என செய்திகள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் ரூ.560 குறைந்தது தங்கம் விலை.. சவரன் ரூ.72000க்குள் மீண்டும் விற்பனை..!

இரண்டே ஆண்டுகளில் இழுத்து மூடப்பட்ட 28 ஆயிரம் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்! - அதிர்ச்சி ரிப்போர்ட்!

போர் பதட்டம் இருந்தாலும் பங்குச்சந்தையில் ஏற்றம்.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

அதிகரிக்கும் சுற்றுலா பயணம்! சிறப்பு ரயில்களை அறிவித்த தெற்கு ரயில்வே! - முழு விவரம்

சித்தராமையா பேச்சை தலைப்பு செய்தியாக வெளியிட்ட பாகிஸ்தான்.. பாஜக கடும் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments