Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டாக பிளந்த பூமி!!: காஷ்மீரில் இயற்கையின் கோர தாண்டவம்!

Webdunia
செவ்வாய், 24 செப்டம்பர் 2019 (17:56 IST)
பாகிஸ்தான் மற்றும் ஆசாத் காஷ்மீர் பகுதிகளில் கடுமையான நிலநடுக்கத்தால் நிலச்சரிவுகள் ஏற்பட்டு நிலப்பகுதி இரண்டாக பிளந்து கொண்டுள்ளது.

இந்தியாவிற்கு அருகே உள்ள பாகிஸ்தான் எல்லைப்பகுதி மற்றும் பாகிஸ்தான் ஆதிக்கத்தில் உள்ள ஆசாத் பாகிஸ்தான் பகுதிகளில் சற்றுமுன் 6.1 ரிக்டர் அளவில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் டெல்லி வரையிலும் உணரப்பட்டுள்ளது. இதனால் அச்சமடைந்த மக்கள் வீதிகளில் இறங்கி ஓடினர்.

எல்லைப்பகுதிகளில் சாலைகள் இரண்டாக பிளந்ததால் வாகனங்கள் பள்ளங்களுக்குள் சென்று விழுந்தன. ஆசாத் காஷ்மீர் மிர்பூர் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பெரிய பள்ளங்கள் உண்டாகியுள்ளன. குழந்தைகள், பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் இதனால் நிலச்சரிவுகளில் சிக்கி பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது நிலநடுக்க பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments