Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடும்ப அரசியல் பற்றி பிரியங்கா பேசுவதா? சந்திரசேகர ராவ் மகள் பதிலடி

Webdunia
வெள்ளி, 20 அக்டோபர் 2023 (07:26 IST)
தெலுங்கானா மாநிலத்தில் பிரியங்கா காந்தி தேர்தல் பிரச்சாரம் செய்தபோது  தெலுங்கானா மாநிலத்தில் குடும்ப அரசியல் நிலவுவதாக கூறிய நிலையில் பிரியங்கா காந்தி குடும்ப அரசியல் குறித்து பேசுவது வேடிக்கையாக இருக்கிறது என சந்திரசேகர ராவ் மகள் கவிதா தெரிவித்துள்ளார்.  

முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் குடும்பத்தில் மூன்று பேர் மந்திரிகளாக இருக்கிறார்கள் என்றும், சந்திரசேகர் மகள் சட்ட மேலவை உறுப்பினராக இருக்கிறார் என்றும் நேற்று நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரியங்கா காந்தி பேசினார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள கவிதா ’மோதிலால் நேரு எள்ளு பேத்தி, ஜவஹர்லால் நேரு கொள்ளுப்பேத்தி, இந்திரா காந்தியின் பேத்தி, ராஜீவ் காந்தியின் மகள் குடும்ப அரசியல் பற்றி பேசுகிறார்

 தேர்தல் பிரச்சாரத்தின் போது நான் கேட்ட எந்த கேள்விக்கும் பிரியங்கா காந்தி பதில் சொல்லவில்லை. ஆனால் குடும்ப அரசியலைப் பற்றி பேசுவதற்கு அவருக்கு எந்த விதமான உரிமையும் இல்லை

பிரியங்கா காந்தி முதலில் தன்னை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும், கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறிய வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

Editd by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரண்ட் ஷாக் வைத்து மீன்பிடிக்க முயற்சி! மின்சாரத்தில் சிக்கி இளைஞர்கள் பலி!

இந்திய எல்லைக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் ரேஞ்சர்.. விசாரணையில் திடுக் தகவல்..!

3 வயது குழந்தைக்கு ஆன்மீக சிகிச்சை.. பரிதாபமாக உயிரிழந்ததால் அதிர்ச்சி..!

பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்த சிஆா்பிஎஃப் வீரர் விசாரணையின்றி டிஸ்மிஸ்.. பெரும் பரபரப்பு..!

இந்து கோவிலுக்குள் நுழைந்து தேவி சிலை மீது சிறுநீர் கழித்த வாலிபர்.. பெரும் கொந்தளிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments