Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேற்றை விட இன்று 12 ஆயிரம் பேர்களுக்கு அதிக கொரோனா பாதிப்பு: என்ன நடக்குது கேரளாவில்?

Webdunia
செவ்வாய், 25 மே 2021 (18:15 IST)
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் மாநிலமாக இருக்கும் நிலையில் அண்டை மாநிலமான கேரளாவில் படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது. குறிப்பாக நேற்று கேரளாவில் 17,821 பேர்களுக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு இருந்தது
 
இந்த நிலையில் கேரள அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக மேலும் படிப்படியாக கொரோனா பாதிப்பு குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று திடீரென சுமார் 30 ஆயிரம் பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
இன்று ஒரே நாளில் கேரளாவில் 29,803 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கேரளாவில் கொரோனா பாதிப்பு காரணமாக 177 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது இன்று ஒரே நாளில் கேரளாவில் 1,43,028 பேர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் இன்று ஒரே நாளில் 33,397 கொரோனாவில் இருந்து குணமடைந்து உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
கேரளாவில் திடீரென நேற்றைவிட இன்று சுமார் 12 ஆயிரம் பேர்களுக்கும் அதிகமாக பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்று பெரும் ஆச்சரியமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

இம்ரான்கானின் அனைத்து சமூக வலைத்தளங்களுக்கும் தடை.. மோடி அரசின் இன்னொரு அதிரடி..!

அவசர அவசரமாக பிரதமரை சந்தித்த விமானப்படை, கப்பல் படை தலைவர்கள்.. இன்று போர் ஆரம்பமா?

ஜம்மு அணையில் இருந்து பாகிஸ்தான் செல்லும் தண்ணீர் நிறுத்தம்.. மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்..!

நீட் தேர்வுக்காக இப்படி அடம்பிடிப்பது நியாயமே அல்ல! - மத்திய அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்!

அடுத்த கட்டுரையில்
Show comments