Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேருந்து கட்டணம் உயர்வு! – கேரள அரசு ஒப்புதல்!

Webdunia
வியாழன், 14 மே 2020 (16:16 IST)
சமூக இடைவெளியை கடைபிடிக்கும் விதமாக குறைவான பயணிகளே பேருந்தில் அனுமதிக்கப்படுவதால் பேருந்து கட்டணத்தை உயர்த்துவதற்கு கேரள அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

ஊரடங்கு மே 17 உடன் முடிவடைய உள்ள நிலையில் மாநில அரசுகள் மேற்கொண்டு செய்யவேண்டிய நடவடிக்கைகளுக்கு தயாராகி வருகின்றது. கேரளாவில் சமூக இடைவெளியை பின்பற்றும் விதமாக 38 பேர் பயணிக்க கூடிய பேருந்துகளில் 19 பேர் மட்டுமே பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மூன்று பேர் இருக்கையில் இருவரும், இரண்டு பேர் இருக்கையில் ஒருவரும் அமர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நின்று செல்ல அனுமதி இல்லை.

இதனால் கேரளா அரசு போக்குவரத்து கழகத்திற்கு பெரும் இழப்பு ஏற்படுவதால் அதனை ஈடுகட்டும் விதமாக டிக்கெட் கட்டணங்களை உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா முழுவதுமாக கட்டுக்குள் வரும் வரை இந்த டிக்கெட் உயர்வு அமலில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை சவக்கிடங்கில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி பாலாஜி உடல்.. போலீஸ் பாதுகாப்பு..!

ஆப்பிரிக்காவில் நிலவும் கடும் பஞ்சம்! 200 யானைகளை கொன்று உணவாக்க திட்டம்! - ஜிம்பாப்வே எடுத்த முடிவு!

என்ன முடி இது..? ஒழுங்கா வெட்டிட்டு வா! திட்டிய பாட்டி! - சிறுவன் எடுத்த விபரீத முடிவு!

சென்னை பல்கலை பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்போம்.. அரசுக்கு ஆசிரியர்கள் கடிதம்..!

22 ஆண்டுகளுக்கு பின் செப்டம்பரில் அதிக வெப்பம்! தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments