Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி 5 வயதில் பள்ளியில் குழந்தைகளை சேர்க்க முடியாது: வயது வரம்பை உயர்த்தி உத்தரவு..!

Mahendran
வெள்ளி, 28 மார்ச் 2025 (10:54 IST)
பொதுவாக, நாடு முழுவதும் குழந்தைகளை 5 வயதில் பள்ளியில் சேர்க்கும் நடைமுறை இருக்கும்போது, கேரளாவில் தற்போது குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் வயதை ஆறு என உயர்த்தி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
ஐந்து வயதில் முதலாம் வகுப்பு சேர்க்க வேண்டும் என்ற அரசின் விதிமுறைகள் இருக்கும் நிலையில், சிலர் இரண்டு வயதிலேயே பேபி கிளாஸ், மூன்று வயதில் எல்கேஜி என குழந்தைகளை பள்ளியில் சேர்த்து வருகின்றனர். இவ்வளவு சிறிய வயதில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது, அவர்களின் மனநலத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வந்தனர்.
 
ஐந்து வயதில் நேரடியாக ஒன்றாம் வகுப்பு சேர்த்தாலே போதும், அதற்கு முன் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என பலர் வலியுறுத்தி வந்தனர்.
 
இந்த நிலையில், 5 வயதை கூட இல்லாமல், 6 வயதாக குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் வயதை நிர்ணயித்து, கேரளா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. குழந்தைகள் 6 வயதில் தான் முறையான கல்விக்கு தயாராகின்றனர் என்று ஆய்வுகள் கூறுவதாகவும், அதனால் தான் 5 வயதிலிருந்து 6 வயதாக மாற்றப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சிவன் குட்டி தெரிவித்துள்ளார்.
 
எனவே, கேரளாவில் இனி 6 வயதில் தான் முதலாம் வகுப்பில் சேர்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதே வழிமுறை தமிழகத்திலும் பின்பற்றப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தாஜ் மஹாலை RDX வைத்து வெடிக்கப்போவதாக மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பு..!

மழை எச்சரிக்கையை மீறி சுற்றுலா! மரம் விழுந்து சிறுவன் பரிதாப பலி! - ஊட்டியில் சோகம்!

பஹல்காமில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு போர்க்குணம் இல்லை! - பாஜக எம்.பி சர்ச்சை கருத்து!

பாகிஸ்தான் யூடியூபருடன் நெருக்கம்.. ஜோதி மல்ஹோத்ரா குறித்த திடுக் தகவல்..!

தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட பெண் போலீஸ்.. நாகை கலெக்டர் ஆபீசில் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments