Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 ஆயிரம் லட்டுகளை வைத்து “லட்டு விநாயகர்” – மண்சிற்ப கலைஞர் அதச்சல் சிற்பம்!

Webdunia
புதன், 31 ஆகஸ்ட் 2022 (09:58 IST)
இன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் நிலையில் லட்டுகளை வைத்தே விநாயகர் செய்து அசத்தியுள்ளார் மண்சிற்ப கலைஞர்.

இன்று இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நாடெங்கும் பல பொது இடங்கள், கோவில்கள், தெருக்களில் பெரிய பெரிய அளவில், வித்தியாச வித்தியாசமான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வருகின்றன.

மக்கள் கையடக்கமாக சிறிய விநாயகர் சிலைகளை வீடுகளுக்கு ஆர்வத்துடன் வாங்கி சென்று பூஜை செய்து வருகின்றனர். இந்த ஆண்டு ஜெயிலர் விநாயகர், புஷ்பராஜ் விநாயகர், ஆர் ஆர் ஆர் விநாயகர் என சினிமா ஸ்டைல் விநாயகர்களும் வைரலாகியுள்ளன.

இந்நிலையில் ஒடிசாவின் புகழ்பெற்ற மணல்சிற்ப கலைஞரான சுதர்சன் பட்நாயக் பூரி கடற்கரையில் விநாயகர் சிற்பம் ஒன்றை அமைத்துள்ளார். மணலால் அமைக்கப்பட்ட இந்த சிற்பத்தை 3,425 லட்டுகளை பயன்படுத்தி அலங்கரித்துள்ளார். இந்த லட்டு விநாயகர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments