Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்றுடன் நிறைவு பெறுகிறது மகா கும்பமேளா.. தூய்மைப்படுத்தும் பணிகள் தொடக்கம்..!

Siva
புதன், 26 பிப்ரவரி 2025 (07:55 IST)
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த மகா கும்பமேளா நிகழ்ச்சி இன்றுடன் முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து, நாளை முதல் தூய்மை பணிகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா மிகச் சிறப்பாக நடைபெற்றுள்ளது. குறிப்பாக, மூன்று நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் கோடிக்கணக்கானோர் புனித நீராடியுள்ளனர். தற்போது வந்துள்ள தகவலின்படி, இதுவரை 63 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ள நிலையில், இன்று நிறைவு நாள் என்பதால் லட்சக்கணக்கான மக்கள் புனித நீராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீவிர கண்காணிப்பு பணியில் உள்ளனர்.

 ஜனவரி 13ஆம் தேதி தொடங்கிய மகா கும்பமேளா, பிப்ரவரி 26ஆம் தேதி இன்று நிறைவு பெறுகிறது. மேலும், கும்பமேளா முடிவடைந்தவுடன் தூய்மைப்படுத்தும் பணிகள் தொடங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, பிரயாக்ராஜில் நடைபெறும் கும்பமேளாவில் ஒரே நேரத்தில் 15 ஆயிரம் பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டுள்ளனர். இது ஒரு கின்னஸ் சாதனையாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முன், 2019 ஆம் ஆண்டு கும்பமேளா நிகழ்வின் போது 10 ஆயிரம் பேர் தூய்மை பணியில் பங்கேற்றிருந்தனர். ஆனால், இந்த முறை 5 ஆயிரம் பேர் அதிகமாக தூய்மை பணியில் ஈடுபட்டு, புதிய சாதனை உருவாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கார்கே கலந்து கொண்ட காங்கிரஸ் கூட்டத்தில் ஆளே இல்லை.. கடுப்பில் பதவி பறிப்பு..!

தங்கச்சிக்கிட்டயே தப்பா பேசுவியா? தவெக விர்ச்சுவல் வாரியர் விஷ்ணுவுக்கு தர்ம அடி! - நடந்தது என்ன?

பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படுவது எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு.

ஒரு லாரியில் கேஸ், ஒரு லாரியில் மண்ணெண்ணெய்! வேகமாக வந்து மோதிய அரசு பஸ்! - அதிர்ஷ்டவசமாக தப்பிய மக்கள்!

திருமணத்திற்கு பிறகும் தனித்தனி கட்டில்.. இந்தியாவில் அதிகரிக்கும் ஸ்லீப் டைவர்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments