Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிருப்தி பாஜக தலைவர்களுடன் மம்தா பானர்ஜி சந்திப்பு: திட்டம் என்ன?

Webdunia
புதன், 28 மார்ச் 2018 (09:55 IST)
பாஜகவுக்கு எதிரான கட்சி தலைவர்களை நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று பாஜகவில் உள்ள அதிருப்தி தலைவர்களை சந்திக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளதால் பாஜகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது

கடந்த சில மாதங்களாகவே பிரதமர் மோடி மற்றும் பாஜக அரசை சத்ருகன் சின்ஹா, யஸ்வந்த் சின்ஹா, அருண்சோரி ஆகியோர் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த பாஜக அதிருப்தி தலைவர்களை இன்று மம்தா பானர்ஜி சந்திக்கவுள்ளார்.

இந்த சந்திப்புக்கு பின்னர் சத்ருகன் சின்ஹா, யஸ்வந்த் சின்ஹா, அருண்சோரி ஆகியோர் கட்சியில் இருந்து விலகி தனி அணி அமைத்து மம்தா பானர்ஜி தலைமையிலான மூன்றாவது அணிக்கு ஆதரவு கொடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

பாஜகவுக்கு எதிரான அரசியல் கட்சிகள், தலைவர்களை ஒரே அணியில் இணைப்பதில் கடந்த சில மாதங்களாக மம்தா பானர்ஜி மற்றும் சந்திரசேகரராவ் ஆகியோர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவது தெரிந்ததே. காங்கிரஸ் மற்றும் பாஜக இல்லாத மூன்றாவது அணியை வலுப்படுத்த இன்னும் பல்வேறு கட்சி தலைவர்களுடன் மம்தா பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளார். இதனால் பாஜக மேலிடம் அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார்.. இந்தியாவுக்கு அழைப்பு விடுத்த பாகிஸ்தான் பிரதமர்..!

மீண்டும் பரவுகிறதா கொரோனா வைரஸ்? ஹாங்காங், சிங்கப்பூரில் பரபரப்பு..!

டாய்லெட் வெடித்து சிதறியதில் 20 வயது இளைஞர் படுகாயம்.. விசாரணையில் திடுக் தகவல்..!

10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய இரட்டை சகோதரிகளுக்கு ஒரே மதிப்பெண்கள்.. ஆச்சரிய தகவல்..!

டாஸ்மாக் மேலாண் இயக்குனரை அழைத்து சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள்: பெரும் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments