Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடி குற்றச்சாட்டுக்கு மன்மோகன் சிங் மறுப்பு அறிக்கை

Webdunia
திங்கள், 11 டிசம்பர் 2017 (17:50 IST)
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், பிரதமர் பதவியை இழந்த பின்னர் தீவிர அரசியலில் இருந்தும் ஒதுங்கி இருந்து வருகிறார். எப்போதாவது மட்டுமே கட்சி அலுவலகம் வரும் அவர் மீது சமீபத்தில் பிரதமர் மோடி பெரும் குற்றச்சாட்டு ஒன்றை தேர்தல் பிரச்சாரத்தின்போது கூறினார். அதாவது மணிசங்கர் அய்யர் வீட்டில் நடைபெற்ற விருந்தில் பாக். தூதரக அதிகாரிகளுடன் மன்மோகன்சிங் ஆலோசனை செய்ததாகவும், அகமது பட்டேலை முதல்வராக்க பாகிஸ்தான் விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார்

இந்த குற்றச்சாட்டுக்கு மன்மோகன்சிங் தற்போது விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மணிசங்கர் அய்யர் வீட்டில் நடைபெற்ற விருந்தில் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளுடன், இந்தியா-பாகிஸ்தான் உறவு குறித்து மட்டுமே ஆலோசனை செய்ததாகவும், குஜராத் தேர்தல் குறித்து எதுவும் பேசவில்லை என்றும் பிரதமர் மோடிக்கு, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் பதிலளித்துள்ளார்

மேலும் பிரதமர் எனும் பெரும் பதவியில் இருக்கும் மோடி, இதுபோன்ற தவறான கருத்துக்களை தெரிவிப்பது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல என்றும் மன்மோகன்சிங் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை ஒப்படைத்தால் மட்டுமே ஆபரேஷன் சிந்தூர் முடியும்: இந்திய தூதர்

தெலுங்கானா கவர்னர் மாளிகையில் ஆவணங்கள் திருட்டு.. ஊழியர்களிடம் விசாரணை..!

மீண்டும் குறைந்த தங்கம் விலை.. மீண்டும் ரூ.70,000க்குள் ஒரு சவரன்.. இன்னும் குறையுமா?

நேற்று சரிவில் இருந்த பங்குச்சந்தை இன்று ஏற்றம்.. ஆனால்.. நிப்டி சென்செக்ஸ் நிலவரம்..!

நோயாளியை தனியார் மருத்துவமனைக்கு போக சொன்ன அரசு மருத்துவமனை டாக்டர்.. ரூ.40 லட்சம் அபராதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments