Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இறையாண்மைக்கு பதிலாக வகுப்புவாதம் என கூறி பதவியேற்ற மேயர்.. காங்கிரஸ் கிண்டல்..!

Siva
திங்கள், 3 மார்ச் 2025 (11:52 IST)
மேயர் பதவி ஏற்பு விழாவில் "இறையாண்மை" என்று கூறுவதற்கு பதிலாக "வகுப்பு வாதம்" எனக் கூறிய பெண் ஒருவரால் சத்தீஸ்கர் மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் நடந்த மாநகராட்சி தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்றது. இந்த நிலையில், பாஜகவில் சேர்ந்த பூஜா என்பவர் மேயராக தேர்வு செய்யப்பட்டார். நேற்று பொதுமக்கள் முன்னிலையில் அவரது பதவி ஏற்பு விழா நடைபெற்றது.
 
அப்போது, "இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு உண்மையாக நடந்து கொள்வேன், இந்திய ஒருமைப்பாட்டையும் வகுப்பு வாதத்தையும் நிலை நாட்டுவேன்" என அவர் வாய் தவறி கூறியுள்ளார். "இறையாண்மையை நிலை நாட்டுவேன்" என்று கூறுவதற்கு பதிலாக "வகுப்பு வாதம்" என கூறியதை அடுத்து, மேடையில் இருந்தவர்கள் உடனடியாக அதை கவனித்து திருத்தினர். இரண்டாவது முறையாக அவர் சரியாக கூறி பதவி ஏற்றார்.
 
இது குறித்து காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. "இது பாஜகவின் நாடகம், வாய்தவறி உளறி இருக்க வாய்ப்பே இல்லை. வேண்டுமென்றே அந்த பெண் 'வகுப்பு வாதம்' என்று கூறி பதவி ஏற்றுள்ளார்" என காங்கிரஸ் கட்சியினர் கூறி வருவது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments