Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளேன் - மெஹ்பூபா முஃப்தி

Webdunia
செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (15:01 IST)
காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) தலைவர் மெஹ்பூபா முஃப்தி தாம் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 
காஷ்மீர் தற்போது இயல்புநிலையில் இல்லை என்று தன்னிடம் உள்ளூர் நிர்வாகம் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தானில் உள்ளவர்களின் உரிமைகளுக்காக இந்தியாவில் ஆளும் மத்திய அரசு கவலைப்படுகிறது. ஆனால், அதே அக்கறையை அது காஷ்மீரிகள் மீது வேண்டுமென்றே காட்ட மறுக்கிறது. காஷ்மீரில் இயல்புநிலை இல்லை என்று உள்ளூர் நிர்வாகத்தினர் என்னிடம் கூறுகின்றனர். அப்படியென்றால், மத்திய அரசு இயல்புநிலை இருப்பதாக போலியாக கூறி வருவது வெளிப்பட்டு விட்டது, என்று மெஹ்பூபா முஃப்தி கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் இருக்கக் கூடாது : பிரதமர் மோடி

வாட்ஸ் அப்பில் பாகிஸ்தான் உளவுத்துறையினர்.. பொதுமக்களுக்கு இந்திய ராணுவம் எச்சரிக்கை..!

உபியில் 17 குழந்தைகளுக்கு சிந்தூர் என பெயர்.. பெற்றோர் மகிழ்ச்சி..!

சீன தயாரிப்புகளை நம்பி ஏமாந்த பாகிஸ்தான்.. சீனாவுக்கும் ஆப்பு வைத்த ஆபரேஷன் சிந்தூர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments