Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொல்கத்தா கூட்டத்தில் வங்கமொழியில் பேசிய மு.க.ஸ்டாலின்

Webdunia
சனி, 19 ஜனவரி 2019 (13:40 IST)
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூட்டிய எதிர்க்கட்சிகளின் பிரமாண்ட கூட்டம் இன்று கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள பாஜகவுக்கு எதிரான கட்சியினர் ஒன்று கூடியுள்ளனர். குறிப்பாக தென்னிந்தியாவில் இருந்து மு.க.ஸ்டாலின், சந்திரசேகரராவ், சந்திரபாபு நாயுடு ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் கொல்கத்தாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரமாண்டமான கூட்டத்தில் சற்றுமுன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச ஆரம்பித்தார். 'வங்கத்து புலிகளே! தமிழ்நாட்டு ஸ்டாலினின் வணக்கம்' என வங்க மொழியில் தொடங்கிய ஸ்டாலின் அதன்பின் ஆங்கிலத்தில் பேசினார்.

எதிர்வரும் மக்களவைத் தேர்தல் நாட்டின் இரண்டாவது சுதந்திர போராட்டமாக அமையும் என்றும், பாஜகவிடம் இருந்து இந்தியாவை மீட்பதுதான் இந்த இரண்டாவது சுதந்திர போராட்டத்தின் நோக்கம் என்றும் பேசிய ஸ்டாலின், 'பிரதமர் மோடி கூறிய பொய்களில் மிகப்பெரிய பொய் கருப்புப்பணத்தை மீட்பேன் என்று கூறியதுதான் என்றும் கூறினார்.

மேலும் எதிரிகளே இல்லை என கூறிய பிரதமர் மோடிதான் எதிர்க்கட்சிகளை பார்த்து பயப்படுகிறார் என்றும், நம் ஒற்றுமையால் அவருக்கு பயம் வந்துவிட்டது என்றும் வேற்றுமையில் ஒற்றுமை என்பதுபோல் நாம் வேறு மாநிலங்களாக இருந்தாலும் ஒற்றுமையுடன் போராடி பாஜகவை வீழ்த்த வேண்டும் என்றும் திமுக தலைவர் பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments