Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல் காந்தி குடும்பமே இடஒதுக்கீட்டுக்கு எதிரானது: பிரதமா் மோடி குற்றச்சாட்டு..!

Mahendran
செவ்வாய், 12 நவம்பர் 2024 (11:38 IST)
ராகுல் காந்தி மட்டுமல்ல, அவரது குடும்பமே இட ஒதுக்கீட்டுக்கு எதிரானது என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

ஜார்கண்ட் மாநில தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில், அங்கு அவர் தேர்தல் பிரச்சாரமாக காணொளி மூலம் பேசினார்.

அப்போது, ராகுல் காந்தி மட்டுமின்றி அவரது மூதாதையர்களான ஜவஹர்லால் நேரு, ராஜீவ் காந்தி உள்பட அனைவரும் இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவர்கள் என்றும், 1990களுக்கு பின்னர் பிற்படுத்தப்பட்டோர், தலித், பழங்குடியினர் என அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டதால் தான் காங்கிரஸ் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியவில்லை என்றும் தெரிவித்தார்.

பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் தான் இட ஒதுக்கீடு பரவலாகப்பட்டது என்றும், இட ஒதுக்கீட்டின் மூலம் தலித் மக்கள் பல நன்மைகளை பெற்றார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜார்கண்ட் சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோட்சா மற்றும் காங்கிரஸ் கூட்டணியை மக்கள் வீழ்த்த வேண்டும் என்றும், நாட்டின் ஒற்றுமையை பறைசாற்ற பாஜக கூட்டணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’எனது சிந்தூரை திருப்பிக் கொடுங்கள்’! இந்தியாவிடம் கண்ணீர் விட்டு கதறும் ராணுவ வீரரின் கர்ப்பிணி மனைவி!

பயங்கரவாதிகளை கண்காணிக்க உளவு செயற்கைக்கோள்.. ரூ.22500 கோடி பட்ஜெட்..!

மீண்டும் வெடித்தது வடகலை - தென்கலை மோதல்.. காஞ்சிபுரம் கோவிலில் பரபரப்பு..!

பாகிஸ்தான் செய்த மிகப்பெரிய தவறு.. ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி கூறிய முக்கிய தகவல்..!

ஆப்கானிஸ்தானில் செஸ் போட்டிக்கு தடை.. சூதாட்ட விளையாட்டு என அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments