Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்டாம்பூச்சிகளை பறக்கவிட்டு பிறந்த நாள் கொண்டாடிய மோடி…

Arun Prasath
செவ்வாய், 17 செப்டம்பர் 2019 (11:56 IST)
பிரதமர் மோடியின் 69 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மோடி பட்டாம்பூச்சிகளை பறக்கவிட்டு தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

பிரதமர் மோடி தனது 69 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று காலை குஜராத்திலுள்ள சர்தாய் வல்லபாய் பட்டேலின் ”ஒற்றுமையின்  சிலை”யை பார்வையிட்டார். பின்பு நர்மதா நதியின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள சர்தார் சரோவர் அணைக்கு சென்றார். பின்பு அங்கு அந்த அணையின் நீர் வரத்து 136.68 மீட்டர் எட்டிவிட்டதை கொண்டாடும் வகையில் “நமாமி நர்மதா” விழாவில் கலந்து கொண்டார்.

பின்பு குஜராத் மாநிலத்தின் முதல்வர் விஜய் ரூபானியுடன், நர்மதா நதிக்கரைக்குச் சென்று பூஜைகள் செய்தார். அதன் பிறகு நர்மதா நதிக்கரையில் அமைந்திருக்கும் கால்வானி சுற்றுலா பூங்காவிற்கு சென்றார். அங்கே பட்டாம்பூச்சிகளை பறக்கவிட்டு தனது பிறந்த நாளை கொண்டாடினார்.
மோடிக்கு காங்கிரஸை சேர்ந்த சோனியா காந்தி, திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட பல அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments