Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தள்ளிப்போனது மோடி திரைப்படம் – டிவிட்டரில் அறிவித்த தயாரிப்பாளர்

Webdunia
வெள்ளி, 5 ஏப்ரல் 2019 (08:33 IST)
பிரதமர் நரேந்தர மோடியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான பி எம் மோடி இன்று வெளியாவதாக இருந்த நிலையில் தள்ளிப்போவதாக படத்தின் தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.

விவேக் ஓப்ராய் நடித்துள்ள பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'பிஎம் நரேந்திரமோடி' என்ற திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் தயாராகியிருக்கும் ஏப்ரல் 5ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஒரு பிரதமர் வேட்பாளரின் திரைப்படம் வெளிவருவது தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகவே பார்க்கப்பட்டு வருகிறது. இதனால் படத்திற்குத் தடை விதிக்கவேண்டும் என திமுக சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்துக்கு தடை கேட்டு காங்கிரஸும் வலியுறுத்தி வருகிறது.

இந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து  தயாரிப்பு நிறுவனத்துக்கும், இசை நிறுவனத்துக்கும் டெல்லியின் தேர்தல் அதிகாரி கே.மகேஷ் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதற்கு வரும் மார்ச் 30 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் அரசியல் படங்கள் மற்றும் அரசியல் தலைவர்களைப் பற்றியப்படங்களை வெளியிடுவதற்கு விதிமுறைகள் உள்ளன. அதுபோல ஊடகங்களில் அரசியல் விளம்பரங்கள் வெளியாவதற்கு முன்பு ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்பு குழுவிடம் முன்னதாகவே சான்றிதழ் பெறவேண்டும். ஆனால் மோடி படக்குழு இந்த விதிமுறைகளை மீறியுள்ளதாகக் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று வெளியாவதாக இருந்த மோடித் திரைப்படம் வெளியாகாது எனவும் வெளியீட்டுத்தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் படத்தின் தயாரிப்பாளர் சந்தீப் சிங் தெரிவித்துள்ளார். படத்தின் இயக்குனரான ஓமங் குமாரும் இதேக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை - என்கவுண்டர் ஏன்.? காவல்துறை அதிகாரி விளக்கம்..!!

குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பது குற்றம்.! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!!

சிறுமியை சீரழிக்க முயன்ற கொடூரன்! அடித்து விரட்டிய குரங்குகள்! - உத்தர பிரதேசத்தில் ஆச்சர்ய சம்பவம்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments