Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராணி வேலு நாச்சியார் பிறந்த நாள்: பிரதமர் மோடி டுவீட்

velunachiyar
Webdunia
செவ்வாய், 3 ஜனவரி 2023 (15:05 IST)
இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட வீரமங்கை ராணி வேலு நாச்சியார் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதை அடுத்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து பதிவு செய்துள்ளார். 
 
ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய முதல் பெண்மணி என்ற பெருமையை பெற்றவர் தென்னிந்தியாவின் ஜான்சி ராணி வீர மங்கை வேலு நாச்சியார் என்பது தெரிந்ததே. 18ஆம் நூற்றாண்டில் சிவகங்கையை ஆண்ட மகாராணியாக இருந்த இவர் ஆங்கிலேயரை எதிர்த்து கடுமையாக போராடினார்.
 
இந்த நிலையில் பிரதமர் மோடி வீரமங்கை வேலுநாச்சியார் பிறந்த நாள் குறித்து தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். வீரமங்கை ராணி வேலு நாச்சியாரின் பிறந்த நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். தம் மக்களுக்கு நீதி கிடைக்க அவர் முன் நின்று போராடினார். காலனி ஆதிக்கத்தை தீவிரமாக எதிர்த்ததுடன் சமூக நன்மைக்காகவும் பணியாற்றினார். அவருடைய பணி தலைமுறை தாண்டியும் உத்வேகம் அளிக்கும் என்று அவர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’! கனடா இந்தியா அறக்கட்டளை வழங்கியது!

குடும்பத்துக்காக தமிழக மானத்தை பாஜகவிடம் அடகு வெச்சிட்டாங்க! - திமுகவை விமர்சித்த தவெக விஜய்!

நாளை தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், ஆரஞ்சு அலெர்ட்! - எந்தெந்த மாவட்டங்களில்?

தாஜ் மஹாலை RDX வைத்து வெடிக்கப்போவதாக மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பு..!

மழை எச்சரிக்கையை மீறி சுற்றுலா! மரம் விழுந்து சிறுவன் பரிதாப பலி! - ஊட்டியில் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments