Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல் நிரப்பினால் பைக் இலவசம்; விற்பனையை அதிகரிக்க பங்க் உரிமையாளர்கள் நூதன விளம்பரம்

Webdunia
புதன், 12 செப்டம்பர் 2018 (15:01 IST)
பெட்ரோல், டீசல் இந்தியாவிலே அதிக விலையில் விற்பனை செய்யப்படும் மாநிலமான மத்தியப்பிரதேசத்தில் விற்பனையை அதிகரிக்க பங்க உரிமையாளர்கள் நூதனமான முறையில் விளம்பரம் செய்து வருகின்றனர்.

 
இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவிற்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மத்திய அரசு விலையை குறைக்க எந்த நடவடிக்கையும் இதுவரை எடுத்ததாக தெரியவில்லை. பெட்ரோல், டீசல் ஆகியவற்றை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
 
ஆனால் மத்திய அரசு இதற்கு செவிசாய்க்கவில்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் விதிக்கப்படும் வரிக்கு ஏற்ப பெட்ரோல். டீசல் விலை ஒவ்வொரு மாநிலத்துக்கு வேறுபடுகிறது. இந்தியாவிலே மத்தியப்பிரதேச மாநிலத்தில்தான் அதிக அளவில் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுகிறது.
 
இதனால் மத்தியப்பிரதேச மாநிலத்தை கடந்து செல்லும் பெரும்பாலான லாரிகள் அம்மாநிலத்தில் பெட்ரோல், டீசல் நிரப்புதை தவிர்த்து வருகின்றனர். அதேபோன்று மத்தியப்பிரதேச எல்லைப்பகுதிகளில் வாழும் மக்கள் பிற மாநிலங்களுக்கு சென்று பெட்ரோல், டீசல் நிரப்பி வருகின்றனர்.
 
இந்நிலையில் மத்தியப்பிரதேச மாநில பங்க உரிமையாளர்கள் நூதன முறையில் விளம்பரம் செய்துள்ளனர். பெட்ரோல், டீசல் நிரப்புவர்கள் இலவசங்கள் வழங்க முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக பெட்ரோல் பங்க் உரிமையாளர் ஒருவர் கூறியதாவது:-
 
100 லிட்டர் பெட்ரோல் நிரப்பினால் டிரைவருக்கு உணவும், தேனீரும் இலவசமாக வழங்கப்படும். 5 ஆயிரம் லிட்டர் நிரப்பினால் சைக்கிள் வழங்கப்படும். 50 ஆயிரம் லிட்டர் நிரப்பினால் ஏசி அல்லது லேப்டாப் வழங்கப்படும். அதிகப்பட்சமாக 1 லட்சம் லிட்டர் நிரப்பும் வாடிக்கையாளர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
 
மேலும் மாநில அரசு பெட்ரோல், டீசல் மீதான் வாட் வரியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பங்க் உரிமையாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
 
ராஜஸ்தான் மற்றும் ஆந்திரா மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான் வாட் வரியை குறைத்தன் மூலம் அந்த மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை சற்று குறைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் பொய்: ஒரு பொய்யின் விளைவு என்ன என்பதை இப்போதாவது ஸ்டாலின் உணர்வாரா? ஈபிஎஸ் கேள்வி..!

மீண்டும் ஒரு புல்டோசர் நடவடிக்கை.. நூற்றுக்கணக்கான கட்டிடங்களை தரைமட்டம் ஆக்கிய 50 ஜேசிபிக்கள்

பார்க்கிங் இடம் இருந்தால் மட்டுமே புதிய கார்கள் பதிவு செய்ய முடியும்: அரசின் அதிரடி அறிவிப்பு..!

தமிழகத்தில் 66 பேருக்கு கொரோனா!? இந்தியாவில் மீண்டும் கொரோனா அதிகரிப்பு!

பாகிஸ்தான் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்.. இம்ரான்கான் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments