Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பையை மிரட்டும் கனமழை: மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 2 ஜூலை 2019 (10:56 IST)
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கனமழை நீடிப்பதால், பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில், சில நாட்களாகவே கனமழை பெய்துவருகிறது. கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் சாலைகள் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிப்பதால், போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மும்பையில் மேலும் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் மும்பையிலுள்ள தனியார் பள்ளிகள், அரசு அலுவலகங்கள், கல்லூரிகள் இன்று முதல் மூன்று நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், கனமழை பெய்துவருவதால் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments