Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோடி தான் 5 மாநில தேர்தல்: நாராயணசாமி

Webdunia
செவ்வாய், 28 நவம்பர் 2023 (10:22 IST)
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோடி தான் தற்போது நடைபெற்று வரும் ஐந்து மாநில தேர்தல் என முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். 
 
அவர் நேற்று தெலுங்கானாவில் தேர்தல் பிரச்சாரம் செய்த போது கடந்த ஆறு மாதங்களாக தெலுங்கானாவில் அரசியல்  சூழ்நிலை மாறிவிட்டது என்றும் ராகுல் காந்தியின் பாதயாத்திரைக்குப் பிறகு தெலுங்கானாவில் மக்களுக்கு புதிய எழுச்சி கிடைத்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். 
 
தெலுங்கானா மாநிலத்தில் பாஜகவுக்கு ஏழு முதல் ஒன்பது தொகுதிகள் மட்டுமே கிடைக்கும் என்றும் பாஜகவின் பீ டீம் ஆகத்தான் சந்திரசேகர் ராவின் பி ஆர் எஸ் கட்சி செயல்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார். 
 
தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் நிச்சயம் வெற்றி பெற்ற ஆட்சி அமைக்கும் என்றும் அதன் பின் தெலுங்கானா மாநிலம் வளர்ச்சி பாதையில் செல்லும் என்றும் அவர் தெரிவித்தார் 
 
மேலும் தற்போது நடைபெற்று வரும் அனைத்து மாநில தேர்தல் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோடி என்றும் இந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்துவது மட்டுமின்றி நாடாளுமன்ற தேர்தலிலும் இந்தியா கூட்டணி பாஜகவை வீழ்த்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: காஷ்மீரில் பரபரப்பு..!

எனது பிறந்தநாளை அதிமுக தொண்டர்கள் கொண்டாட வேண்டாம்: எடப்பாடி பழனிசாமி

பாகிஸ்தானை இந்தியா கைப்பற்றும் லாகூர் ‘லவ் நகர்’ ஆகும்.. கராச்சி ‘நியூ காசி’ ஆகும்: மார்க்கண்டேய கட்சு

விடிய விடிய பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதல்.. பதுங்கு குழியில் ஜம்மு மக்கள்..!

நிதி கொடுத்து உதவுங்கள்.. உலக வங்கியிடம் கெஞ்சும் பாகிஸ்தான் அரசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments