Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல் பங்கில் மோசடியை தடுக்க புதிய திட்டம்....

Webdunia
வியாழன், 6 ஜூலை 2017 (18:07 IST)
பெட்ரோல் பங்குகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பெட்ரோல் மற்றும் டீசலில் மோசடி நடப்பதை தடுப்பதற்கு அரசு சில திட்டங்களை தீட்டி வருகிறது.


 

 
பொதுவாக பெட்ரோல் பங்குகளில் அளிக்கப்படும் பெட்ரோலில் மோசடி நடப்பதாக நாடெங்கும் புகார் எழுந்து வருகிறது. பெட்ரோல் பங்குகளில் பணிபுரியும் ஊழியர்களில் சிலர், மக்களுக்கு குறைவாக பெட்ரோலை கொடுத்து லாபம் சம்பாதிப்பதாக கூறப்படுகிறது.
 
அதிலும், மகாராஷ்டிரா மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில், பெட்ரோல் பைப்பில், ஒரு சிப் பொருத்தப்பட்டு, அதை ரிமோட் கருவி மூலம் இயக்கி பெட்ரோல் மற்றும் டீசலின் அளவை குறைத்து பொதுமக்களிடம் மோசடியில் ஈடுபடுகின்றனர் என்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் படி லிட்டருக்கு 50 மி.லி குறையும்.
 
இதுபற்றி பெட்ரோல் அமைச்சகம், பொதுத்துறை எண்ணெய் நிறுவன அதிகாரிகள் மற்றும் மத்திய நுகர்வோர் விவகார அமைச்சக அதிகாரிகள் ஒன்று கூடி ஆலோசனை செய்தனர். அதில், எலக்ட்ரானிக் முறையில் பெட்ரோல் பம்புகளில் பாஸ்வேர்டு மூலம் இ-சீலீங் வைப்பது என முடிவு செய்யப்பட்டது.
 
இந்த திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும் எனத்தெரிகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயற்சி.! திருச்சியில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த காவல்துறை.!!

லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் - 100-க்கும் மேற்பட்டோர் பலி..!!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments