Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 மாத வாடகையை மட்டுமே இனி முன்பணமாக வாங்க வேண்டும்.. மத்திய அரசின் புதிய சட்ட திட்டம்

Arun Prasath
வெள்ளி, 27 செப்டம்பர் 2019 (18:04 IST)
மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய மாதிரி வாடகை வீட்டு வசதி வரைவு சட்டத்தில், இரண்டு மாத வாடகையை மட்டுமே முன்பணமாக வழங்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும், வாடகை வீட்டிற்கு இனி இரண்டு மாத வாடகையை மட்டுமே முன்பணமாக பெற வேண்டும் என்று, மத்திய அரசு, மாதிரி வீட்டு வசதி சட்ட வரைவை அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பியுள்ளது. மேலும் அந்த வரைவு சட்டத்தில், வாடகையை உயர்த்த வேண்டும் என்றால் மூன்று மாதங்களுக்கு முன்பே தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதே போல், ஒப்பந்த காலம் முடிந்த பிறகும் வாடகைத்தாரர் வீட்டை காலி செய்ய மறுத்தால், அபராதம் விதிக்கவும், ஒவ்வொறு மாதத்திற்கும் இரு மடங்கு வாடகையை உரிமையாளர்கள் வசூலிக்கவும் அந்த சட்டத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு வாடகைத் தாரர்களின் உரிமைகளுக்கு இணையாக நில உரிமையாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் இந்த சட்ட திட்டம் உருவாக்கியிருப்பதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments