Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 மாத வாடகையை மட்டுமே இனி முன்பணமாக வாங்க வேண்டும்.. மத்திய அரசின் புதிய சட்ட திட்டம்

Arun Prasath
வெள்ளி, 27 செப்டம்பர் 2019 (18:04 IST)
மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய மாதிரி வாடகை வீட்டு வசதி வரைவு சட்டத்தில், இரண்டு மாத வாடகையை மட்டுமே முன்பணமாக வழங்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும், வாடகை வீட்டிற்கு இனி இரண்டு மாத வாடகையை மட்டுமே முன்பணமாக பெற வேண்டும் என்று, மத்திய அரசு, மாதிரி வீட்டு வசதி சட்ட வரைவை அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பியுள்ளது. மேலும் அந்த வரைவு சட்டத்தில், வாடகையை உயர்த்த வேண்டும் என்றால் மூன்று மாதங்களுக்கு முன்பே தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதே போல், ஒப்பந்த காலம் முடிந்த பிறகும் வாடகைத்தாரர் வீட்டை காலி செய்ய மறுத்தால், அபராதம் விதிக்கவும், ஒவ்வொறு மாதத்திற்கும் இரு மடங்கு வாடகையை உரிமையாளர்கள் வசூலிக்கவும் அந்த சட்டத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு வாடகைத் தாரர்களின் உரிமைகளுக்கு இணையாக நில உரிமையாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் இந்த சட்ட திட்டம் உருவாக்கியிருப்பதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments