Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிபா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களுக்கு விடுமுறை

Webdunia
சனி, 2 ஜூன் 2018 (10:03 IST)
தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் ‘நிபா’ வைரஸ் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நிபா  வைரஸ் தாக்கிய நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த கேரளாவில் உள்ள பாலுசேரி தாலுகா மருத்துவமனையின் டாக்டர்கள், நர்ஸ்கள் ஆகியோர்களை உடனடியாக விடுப்பில் செல்ல கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.
 
கேரளாவில் நிபா வைரஸ் தாக்குதால் காரணமாக இதுவரை 16 பேர் பலியாகியுள்ள நிலையில் கோழிக்கோடு மாவட்டம் பாலுசேரி தாலுகா மருத்துவமனையில் ‘நிபா’ வைரஸால் பாதிக்கப்பட்ட இரண்டு பேர் சிகிச்சை பெற்று வந்தனர். அதன் பின்னர் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இவர்கள் மாற்றப்பட்டனர். இருப்பினும் சிகிச்சையின் பலனின்றி இருவரும்  உயிரிழந்தனர்.
 
இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாலுசேரி மருத்துவமனையில் இந்த இரண்டு நோயாளிகளுக்கும் சிகிச்சை அளித்த 4 டாக்டர்கள், நர்ஸ்கள் உள்ளிட்ட ஊழியர்களை  1 வாரத்துக்கு விடுப்பில் செல்ல மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

அடுத்த கட்டுரையில்
Show comments