Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் முறை பணியில் சேருவோருக்கு ஒரு மாத சம்பளம்.. பட்ஜெட்டில் அறிவிப்பு!

Mahendran
செவ்வாய், 23 ஜூலை 2024 (12:23 IST)
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் நிலையில் இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் சற்றுமுன் முதல் முறையாக பணியில் சேர்வோருக்கு ஒரு மாத சம்பளம் வழங்கப்படும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார் 
முறைசார் துறைகளில் முதல் முறை பணிக்கு சேரும் இளைஞர்களுக்கு ஒரு மாத சம்பளம் மத்திய அரசால் வழங்கப்படும் என்றும் இந்த திட்டத்தின் கீழ் ஒரு லட்ச ரூபாய் வரை மாத சம்பளம் பெறும் இளைஞர்களுக்கு மூன்று தவணைகளாக சம்பளம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
 
இதன் மூலம் 2.1 கோடி இளைஞர்கள் பயனடைவார்கள் என்றும் தொழிலாளர் வைப்பு நிதி பதிவேட்டின் அடிப்படையில் பயனாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
 
இந்த அறிவிப்பு முதல் முறையாக வேலைக்கு செல்லும் இளைஞர்களுக்கு ஊக்குவிக்க வகையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய பட்ஜெட்டில் வெளியான இந்த அறிவிப்புக்கு இளைஞர்கள் மத்தியில் பேரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments