Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாய்-பிரண்ட் இல்லாத மாணவிகளுக்கு அனுமதி இல்லை.. கல்லூரி முதல்வரின் அதிர்ச்சி அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 24 ஜனவரி 2023 (16:39 IST)
பாய்-பிரண்ட் இல்லாத மாணவிகளுக்கு அனுமதி இல்லை.. கல்லூரி முதல்வரின் அதிர்ச்சி அறிவிப்பு
வரும் பிப்ரவரி 14ஆம் தேதிக்குள் ஒவ்வொரு மாணவியும் குறைந்தது ஒரு பாய் பிரண்டை வைத்திருக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் கல்லூரியில் அனுமதி இல்லை என்றும் கல்லூரி முதல்வரே நோட்டீஸ் ஒட்டியிருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஒடிசா மாநிலத்தில் உள்ள எஸ்விஎம் என்ற தனியார் கல்லூரியில் முதல்வரின் கையெழுத்திட்டு ஒரு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. அந்த நோட்டீஸில் பாதுகாப்பு காரணங்களுக்காக மாணவிகள் கல்லூரி வளாகத்திற்கு நுழையும் போது குறைந்தது ஒரு பாய் ஃபிரண்ட் உடன் இருக்க வேண்டும், இல்லை என்றால் அவர்களுக்கு கல்லூரியில் அனுமதி இல்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
 
இந்த நோட்டீஸ் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் தன்னுடைய கையெழுத்தை யாரோ தவறாக பயன்படுத்தி இதுபோன்ற போலியான நோட்டீசை ஒட்டி உள்ளனர் என்று கல்லூரி முதல்வர் கூறினார். மேலும் இது குறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில் இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments