Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓகி புயல்: சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை!

Webdunia
வெள்ளி, 1 டிசம்பர் 2017 (10:58 IST)
ஓகி புயல் தீவரம் அடைந்து வருவதனால் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் இரவு பயணத்தை தவிர்த்துக் கொள்ளுமாறு பத்தனம்திட்டா மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு மாநிலங்களில் இருந்து  லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வருவது வழக்கம்.அதேபோல் இந்த ஆண்டும் பக்தர்கள் வரத்தொடங்கி உள்ளனர். இந்நிலையில் கன்னியாகுமரி-கேரள கடல் எல்லைப் பகுதியில் நிலை கொண்டிருக்கும் ஓகி புயல் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
 
எனவே, அசம்பாவிதங்களை தவிர்க்க சபரிமலைக்கு வரும் பக்தர்கள் இரவு நேர பயணத்தை தவிர்க்கும்படியும் குறிப்பாக மலைப்பாதைகள் மற்றும் காடுகள் வழியாக செல்லும் பக்தர்கள் கட்டாயம் இரவு நேர பயணத்தை மேற்கொள்ள வேண்டாம் என்றும் பத்தனம்திட்டா மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட பழங்கால பொருட்களை ஒப்படைத்த ஜோ பைடன்.. நன்றி சொன்ன மோடி..!

வங்கக்கடலில் உருவாக உள்ள 2 புயல்கள்! இயல்பை விட அதிகமாக பொழியும் மழை! - டெல்டா வெதர்மேன் தகவல்!

அதிமுக ஒன்னு சேர்ந்திடுமோன்னு திமுகவுக்கு பயம்! - ஓபிஎஸ் கண்டன அறிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments