Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் காக்கை டுவீட்: தொடரும் கிரண்பேடியின் கிண்டல்!

Webdunia
புதன், 20 பிப்ரவரி 2019 (08:34 IST)
புதுவை ஆளுனர் கிரண்பேடிக்கும், முதல்வர் நாராயணசாமிக்கும் கடந்த சில மாதங்களாக கருத்துவேறுபாடு இருந்து கொண்டிருந்த நிலையில் கடந்த வாரம் ஆளுனரை எதிர்த்து முதல்வர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். ஒருவாரம் நடந்த இந்த போராட்டம் பேச்சுவார்த்தைக்கு பின் முடிவுக்கு வந்தது

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் கிரண்பேடி தனது டுவிட்டர் பக்கத்தில் இரண்டு காக்கா படத்தை பதிவு செய்து ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு ஆளும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களும் நெட்டிசன்களும் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, கவர்னர் நிறவெறியுடன் நடந்து கொள்வதாகவும் விமர்சனம் செய்தனர்

இந்த நிலையில் புதுச்சேரி கவர்னர் தனது டுவிட்டர் கணக்கில் மீண்டும் காக்கை படத்தை பதிவிட்டுள்ளார். ஆளுநர் மாளிகையில் 2 காக்கைகள் ஜோடியாகவும், ஒரு காக்கை தனியாக இருப்பது போன்றும் அவர் ஒரு படத்தை பதிவு செய்துள்ளார். இந்த படம் இயற்கையை குறிப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தாலும் இந்த பதிவுக்கும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments